×

சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கப்பசை பறிமுதல்; 2 பேர் கைது

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைகளில் தங்கம் கடத்திவந்த இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இலங்கையில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். சென்னையை சேர்ந்த 2 ஆண் பயணிகள் தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றனர். இதனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் 2 பயணிகளையும் மீண்டும் உள்ளே அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களின் உடமைகளை சோதனையிட்டபோது அவர்களின் உள்ளாடைகளுக்குள் பிளாஸ்டிக் பார்சல்கள் மறைத்து வைத்திருந்தனர். அவற்றை பிரித்து பார்த்தபோது தங்கப்பசை மறைத்து வைத்திருந்தனர். இதையடுத்து 2 பார்சல்களில் இருந்து 2 கிலோ தங்கப்பசையை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.85.5 லட்சம் என்று தெரிகிறது. இதையடுத்து பயணிகள் இரண்டுபேரையும் கைது செய்து விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கப்பசை பறிமுதல்; 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Meenambakkam ,Sri Lanka ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் கட்டுப்பாட்டு அறையின் ஏடிசி டவரில் தீ விபத்து